27 கோடி பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு அமைப்பான கம்பேரிடெக் தகவல் வெளியிட்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு அமைப்பான கம்பேரிடெக் மேற்கொண்ட ஆய்வில், பேஸ்புக் பயனர்காள் 27 பேரின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது தெரியவந்தது. இதில் பயனர்களின் பெயர், தொலைபேசி எண், ஃபேஸ்புக் முகவரி ஆகிய தகவல்கள் எல்லோரும் பார்க்கும் வகையில் ஹேக்கர்களின் இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த தகவல்களை வியாட்னமை சேர்ந்த ஹேக்கர்கள் கசியவிட்டதாகவும், இந்த தகவல்களை இணையத்தில் பாஸ்வேர்ட் இன்றி யார் வேண்டுமானாலும் கையாளக்கூடிய நிலையில் உள்ளது.
இதுகுறித்து தாங்கள் விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், இந்த தகவல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு தற்போது வெளியிடப்பட்டு இருக்கலாம் என்றும் ஃபேஸ்புக் தரப்பு தெரிவித்துள்ளது.